சிறு வெங்காயம் உடல் சூட்டைத் தணித்து,உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.உடல்வலி மற்றும் புற்றுநோயை நீக்கும் பண்புகளும் அதற்கு உண்டு.
வெங்காயத்தில் விட்டமின் சி சத்து தாராளமாக உள்ளது. பச்சை வெங்காயத்தில் தான் இந்தச்சத்து அதிகமாக உள்ளது.; விட்டமின் சி சத்தினை வெங்காயத்திலிருந்து முழுமையாகப் பெற வேண்டுமானால் அதனைப் பச்சையாகவே சாப்பிடுவது நல்லது.
வெங்காயத்தை அன்றாடம் உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால் ஜுரணசக்தி மேம்படும்,இரத்தம் சுத்தம் அடையும், ஜுரண உறுப்புகளின் செயல்திறன்.பெருகும்,எலும்புகளுக்கு நல்ல வலிமையை தரும்,நரம்புகளின் செயற்பாட்டை ஒழுங்குபடுத்தும்,உடல்சூடு மிகுந்திருந்தால் இயல்பான நிலைக்கு கொண்டு வரும்.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.
திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
தேள் அல்லது குளவி கொட்டினால் கொட்டிய இடத்தில் வெங்காயத்தை அறுத்து தேய்த்தால் உடன் விசம் இறங்கும்.
வெங்காயத்தை சுட்டு பிசைந்து மஞ்சளும் சேர்த்து மறுபடியும் சுட வைத்துக் கட்டிகளுக்குக் கட்டினால் விரைவில் கட்டிகள் பழுத்து உடைந்து விடும்.
வெங்காயத்தை தயிரில் நறுக்கிப் போட்டு தொடர்ந்து சாப்பிட்டு வர மூலச்சூடு அகலும்,மற்றும் மூலம் தொர்பான பிற குறை பாடுகளும் அகலும்.
மாதவிலக்கு ஒழுங்காக ஆகாதபோதும் வலி போன்ற தொல்லை இருக்கும்போதும் வெங்காயப்பூவை சேகரித்து காயப்போட்டு இடித்து தூளாக்கி ஒரு சிட்டிகை அளவு காலை,மாலை வெந்நீரிலிட்டு சாப விருத்திபிட நல்ல குணம் தெரியும்.
இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.
வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி,பால்,தேன் அல்லது முட்டையுடன் சாப்பிட தாது விருத்தி,உடல் வலிமை, வனப்பு ஏற்படும்.
முருங்கையை விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம்
வெங்காயத்துடன் கஸ்தூரிமஞ்சள் சேர்த்தரைத்து சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து தடவினால் பொதுவாக சரும நோய்கள் குணமாகும்.
வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்துசாப்பிடஇருமல் குணமாகும். இவ்வாறு செய்ய பித்தக் கோளாறுகளும் குணமாகும்.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன, இதயத்தின் தோழன் என்றே சொல்லலாம்
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிப்பதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது.
நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணிக்க வைப்பதுடன் தேவையான சத்துக்களை உடலின் தேவைக்கேற்ப பிரித்துக் கொடுக்கிறது.
பெரும்பாலும் பல் சிதைவு மற்றும் வாய் நோயை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
காலரா பரவியிருக்கும் காலத்தில் அன்றாடம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் காலரா நோய்க்கு அது தடுப்பாக அமையும் காலரா பற்றாது.
வெங்காயத்தை பாதியாக நறுக்கி முகப்பரு உள்ள இடத்தில் அழுத்தத் தேய்த்து வந்தால் 23 நாட்களில் முகப்பரு உடைந்து விடும்.
ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்று தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதோடு தும்மலும் நின்றுவிடும். கூடவே நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் எல்லாம் குணமாகும்.
நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால், உடம்பு சமநிலைக்கு வந்துவிடும்.
பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.
மூல நோயால அவதிப்படுகிறவர்கள் சாப்பாட்டில் அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்வது நல்லது. நீர்மோரில சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.
தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. தலை பகுதியில் சொட்டை விழுந்து முடி முளைக்காமல் இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால்… காலப்போக்கில் முடி முளைக்கும். ஆண்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்.
இரத்தம் நன்கு வளமாக அமைய வெங்காயத்தை சூப் செய்து அதை தேநீருக்கு அல்லது காப்பிக்கு பதிலாக குடித்து வர வேண்டும்.
0 Comments