தலப்பா கட்டு மட்டன் பிரியாணி

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • நெய் – 3 டீஸ்பூன்
  •  டால்டா – 3 டீஸ்பூன்
  •  உப்பு – தேவையான அளவு
  •  எண்ணெய் – 1/4 கப்,
  •  ஏலக்காய் – 2,
  •  தயிர் – 1 கப்,
  •  எலுமிச்சம் பழம் – 1/2 மூடி,
  •  கிராம்பு – 2,
  •  பெரிய வெங்காயம் – 2,
  •  தக்காளி – 2,
  •  பட்டை – சிறிது,
  •  இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  •  சீரக சம்பா அரிசி – 1/2 கிலோ,
  •  மட்டன் – 1/2 கிலோ,
  •  மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிகொள்ளவும் .
வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் , மட்டன் சேர்த்து வதக்கவும் .நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்
.தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும்.அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.அரிசி வெந்ததும் நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்.

Post a Comment

0 Comments