தேவையான பொருட்கள்:
- மாதுளம் பழம் – 1
- இஞ்சி – சிறிய துண்டு
- புதினா தழை – 1 கைப்பிடி
- பச்சைமிளகாய் – 3
- கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
- வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கு
- எண்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை :
- Step 1.
முதலில் கொத்தமல்லி, புதினாவை நன்றாக கழுவி வைக்கவும். மாதுளம் பழத்திலிருந்து முத்துக்களை தனியாக எடுத்து வைக்கவேண்டும் .
- Step 2.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கி இறக்கி ஆறவைக்கவும்.
- Step 3.
ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் மாதுளை முத்துக்கள், உப்பு, சீரகத்தூள் சேர்த்து நன்றாக அரைத்து பரிமாறவும்.
- Step 4.
இந்த சட்னியை புலாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு கலந்த கலவையாக இது இருக்கும்.
0 Comments