தேவையான பொருட்கள்:
- உளுத்தம் பருப்பு - 3/4 கப்
- கேழ்வரகு மாவு - 2 கப்
- உப்பு - 1 தே.கரண்டி
செய்முறை :
முதலில் உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும் பிறகு .
கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்
இதனை குறைந்தது 7 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும். இந்த மாவுக் புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.)
புளித்த இட்லி மாவினை, இட்லி தட்டில் ஊற்றவும். இதனை இட்லி வேகவைப்பது போல 1௦ நிமிடங்கள் வேகவிடவும்.பின்பு பரிமாறவும்.
0 Comments